திருவாரூர்

பேருந்து மோதி மெக்கானிக் சாவு

DIN

திருவாரூர் அருகே அரசுப் பேருந்து மோதி மெக்கானிக் உயிரிழந்தார்.
திருவாரூர் பழவனக்குடி மருதப்பட்டினத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (49). இருசக்கர வாகன மெக்கானிக். இவர், தனது நண்பர் கோபாலகிருஷ்ணனுடன் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் சென்றுகொண்டிருந்தார். திருத்துறைப்பூண்டி சாலை புலிவலம் பகுதியில் செல்லும்போது, அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே தண்டபாணி உயிரிழந்தார். படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, திருவாரூர் தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT