திருவாரூர்

காவலரை தாக்கியவர் கைது

DIN

திருவாரூரில் விளம்பர பதாகை வைத்த பிரச்னை தொடர்பாக காவலரை தாக்கியவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றுபவர் கவியழகன். இவர் விளமல் பகுதியில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைக்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என அங்குள்ளவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கவியழகன் தாக்கப்பட்டாராம்.
இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, விளமல் பகுதியைச் சேர்ந்த ஜானை கைது செய்தனர். மேலும், பவித்திரமாணிக்கத்தைச் சேர்ந்த கவியரசனை தேடிவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT