திருவாரூர்

மக்கள் குறைதீர் கூட்டம்

DIN

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. 
ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா மாறுதல்,  புதிய குடும்ப அட்டை,  ஆக்கிரமிப்பு அகற்றுதல்,  கல்விக் கடன்,  மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 136 பேர் மனு அளித்தனர். பொதுமக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து குறித்த காலத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார். 
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தெய்வநாயகி,  தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) ஏ. மலர்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT