திருவாரூர்

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

DIN

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள தளிக்கோட்டையில் கோயில் உண்டியலை உடைத்து, காணிக்கை பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார்
தேடிவருகின்றனர்.
மேலத்தளிக்கோட்டையில் விநாயகர் மற்றும் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் முன்பக்கக் கதவு திங்கள்கிழமை உடைக்கப்பட்டிருந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக தரையில் புதைக்கப்பட்டிருந்த சில்வர் குடத்தாலான உண்டியல் உடைக்கப்பட்டிருந்து, அதில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின்பேரில், பரவாக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT