திருவாரூர் அருகே பேருந்தில் பயணம் செய்தவரின் பணப்பை திருட்டு போனதாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் காந்திமதி (52). இவர், கடந்த மார்ச் மாதம் 29-ஆம் தேதி மன்னார்குடியிலிருந்து திருவாரூர் வந்து, பின்னர் அங்கிருந்து, அரசுப் பேருந்தில் ஆட்சியர் அலுவலகம் வரை பயணம் செய்தபோது, அவரிடமிருந்த பணப்பை காணாமல் போனதாம். அந்த பையில் 2 பவுன் மதிப்புள்ள 1 ஜோடி வளையல், 3 கிராம் மதிப்புள்ள 3 மோதிரம், ரூ. 1500 ரொக்கம் என ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பணப்பை எங்கும் கிடைக்காத நிலையில் ஆன்லைனில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் திருவாரூர் தாலுக்கா போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.