திருவாரூர்

பேருந்து பயணியிடம் பணப்பை திருட்டு

DIN

திருவாரூர் அருகே பேருந்தில் பயணம் செய்தவரின் பணப்பை திருட்டு போனதாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் காந்திமதி (52). இவர், கடந்த மார்ச் மாதம் 29-ஆம் தேதி மன்னார்குடியிலிருந்து திருவாரூர் வந்து, பின்னர் அங்கிருந்து, அரசுப் பேருந்தில் ஆட்சியர் அலுவலகம் வரை பயணம் செய்தபோது,  அவரிடமிருந்த பணப்பை காணாமல் போனதாம். அந்த பையில் 2 பவுன் மதிப்புள்ள 1 ஜோடி வளையல், 3 கிராம் மதிப்புள்ள 3 மோதிரம், ரூ. 1500 ரொக்கம் என ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பணப்பை எங்கும் கிடைக்காத நிலையில் ஆன்லைனில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் திருவாரூர் தாலுக்கா போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT