திருவாரூர்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

DIN

மன்னார்குடி அருகே ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.
 கோட்டூர் அருகே உள்ள  புழுதிக்குடி ஊராட்சி, சோழங்கநல்லூர் கிராமத்தில் செயல்படும் ஒஎன்ஜிசி நிறுவனத்தை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்துக்காக கையகப்படுத்திய விளை நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 சோழங்கநல்லூர் கிராம போராட்டக்குழு சார்பில் ஒ.என்.ஜி.சி. அலுவலகத்துக்குச் செல்லும் சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ,போராட்டக் குழுத் தலைவர் ஏ.கே. ராஜ்பாலன் தலைமை வகித்தார்.  போராட்டக் குழு நிர்வாகிகள் தவமணி, செல்வம், காவிரி உரிமை மீட்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், சமூக ஆர்வலர் சோம. இளங்கோவன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT