திருவாரூர்

சாலை விபத்தில் பெண் பலி

நீடாமங்கலம் அருகே சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் பெண் உயிரிழந்தார்.

DIN

நீடாமங்கலம் அருகே சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் பெண் உயிரிழந்தார்.
நீடாமங்கலம் அருகேயுள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு மகன் சதாசிவம் (45). நீடாமங்கலம் மேலக்கடம்பூரைச் சேர்ந்த பழனி மனைவி உஷா (35). இவர்கள் இருவரும் சனிக்கிழமை இரவு  மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
ராயபுரம் - காளாஞ்சிமேடு பகுதியில் வரும்போது, அந்த வழியாக வந்த மினி லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உஷா உயிரிழந்தார். நீடாமங்கலம்  போலீஸார், உஷாவின் சடலத்தை உடல் கூராய்வுக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சதாசிவம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து, நீடாமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT