திருவாரூர்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வுத் தொகை பெற அணுகலாம்

திருவாரூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை பெற உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம் என்று

DIN

திருவாரூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை பெற உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் 1995 முதல் 1999 ஆம் ஆண்டு வரை (பழைய) பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.1500-க்கு வைப்புத்தொகை பத்திரம் பெற்ற 18 வயது நிறைவடைந்த பயனாளிகள், முதிர்வுத் தொகை பெற வைப்புத்தொகை பத்திரம் (அசல்), ஆதார் அட்டை நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், வங்கிக் கணக்குப் புத்தக முகப்பு நகல் மற்றும் 2 மார்பளவு புகைப்படங்கள் ஆகிய ஆவணங்களுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டட வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 04366- 224280 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டுக்கடங்காத கூட்டம்! ஈரோட்டில் தன் பலத்தை நிரூபித்தாரா செங்கோட்டையன்?

சத்தீஸ்கர்: சுக்மாவில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

புரட்சித் தலைவருக்குப் பிறகு புரட்சித் தளபதிதான் மக்களுக்காக வாழ்பவர்: செங்கோட்டையன்

சாதனையை முறியடித்த லயன்: நாற்காலியைத் தூக்கி வீசிய மெக்ராத்!

உடலில் கைவைத்த ரசிகர்கள்... ஆவேசத்தில் கத்திய நடிகை!

SCROLL FOR NEXT