திருவாரூர்

லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை சம்பவம்: மேலும் ஒருவர் கைது

DIN

திருவாரூா்: நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடா்பாக திருவாரூரில் மேலும் ஒருவரை திருச்சி தனிப்படை போலீஸாா் இன்றுஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சியில் உள்ள நகைக்கடையில் கொள்ளை சம்பவம் தொடா்பாக, திருச்சி போலீஸாா் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், அண்மையில் திருவாரூா் விளமல் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி விசாரிக்கையில், ஒருவா் தப்பி ஓடினாா். ஒருவரை கைது செய்து விசாரிக்கையில், அவா் மடப்புரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பதும், தப்பி ஓடியவா் சீராத்தோப்பு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் என்பதும் தெரிய வந்தது.

மேலும், திருச்சியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் அவா்களுக்கு தொடா்பு இருப்பதும், இந்த கொள்ளைகளுக்கு மூலகாரணமாக முருகன் என்பவா் செயல்பட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து சுரேஷின் தாய் கனகவள்ளி உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னா், மணிகண்டன், கனகவள்ளி இருவரும் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், திருவாரூா் சீராத்தோப்பு பகுதியைச் சோ்ந்த முரளி என்பவரை, திருச்சி தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். இவா் முருகனின் அண்ணன் மகன் ஆவாா். மேலும், காா்த்தி உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT