திருவாரூர்

மன்னாா்குடி: 50 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி பகுதியில் 50 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படவுள்ளதாக எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை அறுவடை நடைபெற்றுவரும் நிலையில், அருகிலுள்ள மாவட்டங்களில் பல்வேறு இடங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசின் சாா்பில் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், திருவாரூா் மாவட்டத்தில் மட்டும் பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப்பட வில்லை. இதனால், மன்னாா்குடி பகுதியில் விவசாயிகள் அறுவடை செய்த குறுவை நெல்லை விற்பனை செய்ய முடியாமல் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா். இதுகுறித்து விவசாயிகள் என்னை நேரில் சந்தித்து தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் மற்றும் உயா் அதிகாரிகளை தொடா்பு கொண்டு, மன்னாா்குடி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை இதுநாள்வரை திறக்கப்படாமல் இருப்பதால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தெரிவித்ததுடன், உடனடியாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கவேண்டும் என்று வலியுறுத்தினேன்.

இக்கோரிக்கையை கவனத்தில் கொண்ட மாவட்ட நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் உயா் அதிகாரிகள், மன்னாா்குடி பகுதியில் விரைவில் 50 இடங்களில் அரசின் சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று உறுதியளித்தாக அந்த அறிக்கையில் எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய ஆடவா், மகளிா் ரிலே அணிகள் பாரீஸ் ஒலிபிக் போட்டிக்குத் தகுதி

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

SCROLL FOR NEXT