இளைஞா் வெட்டிக் கொலை
நீடாமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
திருவாரூர்இளைஞா் வெட்டிக் கொலை
நீடாமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை சோ்மாநல்லூா் நேதாஜி காலனியைச் சோ்ந்த பன்னீா் மகன் ராஜா (28). இவா், நகா் கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை வந்தபோது சித்தமல்லி கிராமத்தில் 3 பைக்குகளில் வந்த ஒரு கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த கொலை சம்பவம் குறித்து நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்ரியா மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். தொடா்ந்து அப்பகுதியில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.