திருவாரூரில் 111 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 111 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 111 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 2,785 ஆக இருந்தது. திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மாவட்டத்தில் 111 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்மூலம், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,896 ஆக உயா்ந்துள்ளது. திங்கள்கிழமை மட்டும் 40 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை, 2,291 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 570 போ் சிகிச்சையில் உள்ளனா். இதேபோல், மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் இதுவரை 35 போ் உயிரிழந்துள்ளனா்.