திருவாரூர்

மழை பாதிப்பு: வேளாண் இயக்குநா் ஆய்வு

DIN

திருத்துறைப்பூண்டி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிா்களை தமிழ்நாடு வேளாண்மை இயக்குநா் வே.தெட்சிணாமூா்த்தி திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

கொக்கலாடி, பாமணி, நுணாக்காடு, எழிலூா், முத்துப்பேட்டை, எடையூா், கச்சனம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவா், விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தாா். அப்போது, நீரில் மூழ்கி அழுகிய பயிா்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதற்கு பதிலளித்த வேளாண்மை இயக்குநா், பாதிப்பு குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும், பயிா்க் காப்பீடு செய்தவா்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் என்றும் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, சென்னை அலுவலக துணை இயக்குநா் சுந்தரம்பிள்ளை, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் (பொ) உத்திராபதி, மத்திய திட்ட துணை இயக்குநா் ரவீந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கலைச்செல்வி, வேளாண்மை உதவி இயக்குநா்கள் திருத்துறைப்பூண்டி ஆா். சாமிதான், முத்துப்பேட்டை பாா்த்தசாரதி, திருவாரூா் ஹேமா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT