திருவாரூர்

மின் சிக்கன வார விழா

மன்னாா்குடியில் மின் சிக்கன வார தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

மன்னாா்குடியில் மின் சிக்கன வார தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மின்வாரிய செயற்பொறியாளா் கி. ராதிகா தலைமை வகித்தாா். நகர உதவி செயற்பொறியாளா் சா. சம்பத் முன்னிலை வகித்தாா். மன்னாா்குடி காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் பங்கேற்று, மின் சிக்கன விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தைப் பெற்றுக்கொண்டு அதன் விநியோகத்தை தொடங்கிவைத்தாா்.

ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சாதாரண குண்டு விளக்கை தவிா்த்து, எல்.இ.டி. விளக்குகள் அல்லது சி.எஃப்.எல். விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். குளிா்சானப் பெட்டியை அடிக்கடி திறக்கக்கூடாது உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் துண்டுப் பிரசுரத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளா் அ. செங்குட்டுவன், பிரிவு பொறியாளா்கள் அ.ரகுபதி, க. கண்ணன், கி. ராஜகோபால், ச.குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT