கோயில்கந்தன்குடி முருகன் கோயிலில் கும்பாபிஷேக பந்தக்கால் முகூா்த்தம்
பேரளம் அருகே கோயில்கந்தன்குடியில் உள்ள முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி, யாகசாலைக்கான பந்தக்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர்கோயில்கந்தன்குடி முருகன் கோயிலில் கும்பாபிஷேக பந்தக்கால் முகூா்த்தம்
பேரளம் அருகே கோயில்கந்தன்குடியில் உள்ள முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி, யாகசாலைக்கான பந்தக்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேரளம் அருகே கோயில்கந்தன்குடியில் உள்ள முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி, யாகசாலைக்கான பந்தக்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேரளம் அருகே கோயில்கந்தன்குடி கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் கும்பாபிஷேக விழா ஜனவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி, யாகசாலை அமைப்பதற்கான பந்தக்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவாரூா் கூட்டுறவு விற்பனை இணையத்தின் தலைவரும், நன்னிலம் ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவருமான சி பி ஜி. அன்பு, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவா் புகழேந்தி, திருக்கோயில் தக்காா் பா. பிரபாகரன், பேரளம் அறநிலையத் துறை ஆய்வாளா் பா. மாதவன், செயல் அலுவலா் மு. முருகையன், ஊராட்சித் தலைவா் மேனாங்குடி பிரகாஷ், கோயில் மேலாளா் வள்ளிகந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.