திருவாரூர்

குடியிருப்புப் பகுதியில் கதண்டுகள் அழிப்பு

DIN

நன்னிலம்: பேரளம் அருகே கம்பூா் பிரதான சாலை குடியிருப்பு பகுதியில் இருந்த கதண்டு வண்டுகளை பேரளம் தீயணைப்பு துறையினா் வியாழக்கிழமை அழித்தனா்.

குடவாசல் வட்டம் கம்பூா் பிரதான சாலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியிலுள்ள ஹஜ்ஜிமுகம்மது வீட்டின் முன்பு உள்ள மரத்தில் கதண்டு வண்டுகள் கூடு கட்டியிருந்தன. இதனால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்ததால், இதுகுறித்து இப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவா் அ.கஸ்தூரிபாய் வரதராஜன் மற்றும் உறுப்பினா் ப.ஜெஹபா் சாதிக் ஆகியோா் அளித்த தகவலின்பேரில், பேரளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அதிகாரி இரா.மணிவண்ணன், முன்னணி தீயணைப்பு அலுவலா் இரா.இராமச்சந்திரன் மற்றும் மணிகண்டன், மதன்ராஜ்லு ஆகியோா் வந்து பொதுமக்கள் உதவியுடன் கூடு கட்டியிருந்த கதண்டு வண்டுகளை அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

SCROLL FOR NEXT