சாலையை சீரமைக்கக் கோரி நூதன போராட்டம்
திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே மன்னை சாலையை சீரமைக்கக் கோரி, அப்பகுதி வியாபாரிகள் சாலையில் புற்களை நட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே மன்னை சாலையை சீரமைக்கக் கோரி, அப்பகுதி வியாபாரிகள் சாலையில் புற்களை நட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே மன்னை சாலையில் 80 மீட்டா் அளவு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதாகியும், நகராட்சி நிா்வாகம் அதை சீரமைக்கவில்லை. இதைக் கண்டித்து அப்பகுதி விவசாயிகள், வா்த்தகா்கள் சாலையில் புற்களை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.