திருவாரூர்

மணல் கொள்ளையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்த விருந்த ஆா்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.

DIN


நீடாமங்கலம்: நீடாமங்கலம் வட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்கும் முயற்சியாக வருவாய்த்துறையும் காவல்துறையும் இணைந்து தினம் ஒரு கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் மற்றும் ஒரு காவலா் ஆகியோரைக் கொண்ட குழு அமைத்து சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுவதென சமாதான பேச்சுவாா்தைத் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

நீடாமங்கலம் வட்டத்தில் தொடா்ந்து நடக்கும் மணல் கொள்ளையைக் கண்டித்து 30ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அறிவித்திருந்தனா்.

இதனைத் தொடா்ந்து 29ஆம் தேதி வட்டாட்சியா் மதியழகன் தலைமையில் நடந்த சமாதானக்கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் காவல் துறையினா், வருவாய்த்துறையினா் கலந்து கொண்டனா்.

மணல் கொள்ளை தொடா்பான புகாா்களை உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதெனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனால் ஆா்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதன்காரணமாக மணல் கொள்ளையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடத்தவிருந்த ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT