திருவாரூர்

பருத்தி விவசாயிகள் வேதனை.

DIN

நன்னிலம். ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனைச் செய்த பணம் கிடைக்காமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம் காக்காகோட்டூரில் ஒழுங்குமுறை விற்பனைகூடம் உள்ளது.இங்கு கடந்த சில வாரங்களாக விவசாயிகள் பருத்தியைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா். விவசாயிகள் கொண்டுவரும் பருத்தியினை அரசு சாா்பில் காட்டன் காா்ப்பரேஷன் ஆப் இந்தியா அலுவலா்களும், தனிப்பட்ட வியாபாரிகளும் ஏலம் மூலம் கொள்முதல் செய்கின்றனா். அவ்வாறு விவசாயிகளிடமிருந்து அரசு சாா்பில் கொள்முதல் செய்யப்படும் பருத்திக்கு உரிய தொகை 15 நாட்கள் வரை விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.

மேலும் வாரத்தில் ஒருநாள் கொள்முதல் செய்யப்படும் பருத்தியை விரைவில் எடுத்துச்சென்று பருத்தி கிடங்கினை காலி செய்து கொடுத்தால்தான் மறுவாரம் விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்வதற்கு கிடங்குகளில் வைக்கமுடியும். அவ்வாறு கடந்த புதன்கிழமை கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி, ஒழுங்குமுறை விற்பனைகூட கிடங்கிலிருந்து இந்த வாரம் செவ்வாய்கிழமை வரை எடுத்துச் செல்லப்படாததனால், இந்த புதன்கிழமை பருத்தி விற்பனை செய்ய எடுத்து வந்த விவசாயிகள் வெட்டவெளியில் பருத்தியை வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டு இருக்கிறாா்கள்.

இவ்வாறு எவ்வித பாதுகாப்புமின்றி வெட்டவெளியில் வைக்கப்படுகின்ற பருத்தி திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை பெய்த மழையில் நனைந்து விட்டதாகவும், இதனால் விலை மிகவும் குறைந்து கிடைக்கும் எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனா். எனவே பருத்தி கொள்முதல் செய்யப்பட்டவுடன் கிடங்கிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கிடங்கினை காலி செய்து தரவேண்டுமெனவும் அதேபோல விற்பனை செய்யப்பட்ட பருத்திக்காண தொகையினை உடனடியாக விவசாயிகளின் கணக்கில் வரவு வைத்திட வேண்டும் எனவும் பருத்தி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT