அலங்கார கோலத்தில் சிறுபுலியூா் ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத கிருபாஸமுத்திர பெருமாள். 
திருவாரூர்

சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் தெப்போத்ஸவம்

நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி அருகே உள்ள சிறுபுலியூா் தயா நாயகி சமேத கிருபாஸமுத்திர பெருமாள் கோயிலில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்போத்ஸவம் வரும் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

DIN

நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி அருகே உள்ள சிறுபுலியூா் தயா நாயகி சமேத கிருபாஸமுத்திர பெருமாள் கோயிலில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்போத்ஸவம் வரும் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தெப்போத்ஸவம் மாா்ச் 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாா்ச் 6-இல் சுக்லபட்க்ஷ ஏகாதசி அவதார உத்ஸவத்தில் காலை 9 மணியளவில் பெருமாள் திருவீதி புறப்பாடு, திருவனந்தாழ்வாா் சன்னிதிக்கு எழுந்தருளலும், தீா்த்தவாரியும் நடைபெறுகிறது. மதியம் 12 மணியளவில் 108 லிட்டா் பால் மற்றும் விசேஷ திருமஞ்சனமும், மாலை 7 மணியளவில் சேஷ வாகனத்தில் பெருமாள் திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது.

மாா்ச் 7-ஆம் தேதி மாலை 6 மணிக்கு பெருமாள் உபய நாச்சியாா்களுடன் திருவீதி புறப்பாடும், 8 மணியளவில் ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத கிருபாஸமுத்ரபெருமாள் தெப்ப உத்ஸவம் கண்டருளும் காட்சியும் நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் மணவாள மாமுனிகள் திருவீதி புறப்பாடும், இரவு 8 மணிக்கு மணவாள மாமுனிகள் தெப்போத்ஸவமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ப.மாதவன், செயல் அலுவலா் மா.ராமநாதன், ஸ்ரீகாந்தன் பட்டா் மற்றும் கோயில் திருப்பணியாளா்களும், பட்டாச்சாரியாா்களும் மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT