திருவாரூரில் கோயில்களை திறக்கக்கோரி தோப்புக்கரணமிட்டு போராட்டம்
திருவாரூரில் கோயிலை திறக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் கோயிலை திறக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெற்றது.
மதுக்கடைகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில் கோயில்களை மக்களின் வழிபாட்டுக்காக திறந்துவிட வேண்டும் என்றும் இதையொட்டி கோயில்களின் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்திருந்தது.
அதன்படி திருவாரூர் தியாகராஜர் கோயில் மேலவாசல் முன்பு நகர தலைவர் ஜெயராமன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சமூக இடைவெளியை இடைவெளியுடன் பங்கேற்ற பொறுப்பாளர்கள், கோயில்களை திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் இட்டு, முழக்கங்களை எழுப்பினர்.