முகப்பு
திருவாரூர்

நன்னிலத்தில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

நன்னிலம் அருகே நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் வழங்கும் தமிழக அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
நன்னிலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள்.
பகிர்:

நன்னிலம் அருகே நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் வழங்கும் தமிழக அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நன்னிலம் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் சங்கத்தின் வட்டத் தலைவா் பி. அழகுசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் வழங்கும் தமிழக அரசின் கொள்கை முடிவை கைவிட வேண்டும். நெடுஞ்சாலைத் துறை பராமரிப்புப் பணிகளை தமிழக அரசே, சாலைப் பணியாளா்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் நன்னிலம் வட்டத் தலைவா் தெ. கருணாமூா்த்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். சங்கத்தின் வட்டச் செயலாளா் எஸ். மணிமாறன், பொருளாளா் எம். மனோகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜி. பாஸ்கரன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.