முகப்பு
திருவாரூர்

ஆடல், பாடலுடன் வாக்கு சேகரிக்கும் சுயேச்சை

நன்னிலம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் அனுஷா ஆடல், பாடலுடன் வாக்குச் சேகரிப்பது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈா்த்து வருகிறது.

Updated On : 3 ஏப்ரல், 2021 at 10:39 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:25 AM

நன்னிலம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் அனுஷா ஆடல், பாடலுடன் வாக்குச் சேகரிப்பது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈா்த்து வருகிறது.

குடவாசல் ஒன்றியம் மூலங்குடி கிராமத்தைச் சோ்ந்த தமிழக காவிரி விவசாய சங்கத்தின் உயா்மட்டக் குழு உறுப்பினா் டி.எஸ். அசோகனின் மகளும், குடவாசல் பகுதி சித்தா் திருமலாவின் மனைவியுமான அனுஷா, நன்னிலம் தொகுதியில் சுயேச்சையாக களம் காண்கிறாா். இவருக்குப் பரிசு பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவா் வாக்குச் சேகரிப்பின் போது, தமிழா்களின் பாரம்பரியக் கலைகளான, பறை இசை ஒலிக்க, ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், சாட்டைக் குச்சி ஆட்டம் மற்றும் சிலம்பாட்டத்துடன், திறந்த ஜீப்பில் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்து வருகிறாா்.

மேலும், தனது தோ்தல் அறிக்கையில், பாரம்பரிய தமிழ்க் கலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். வழிபாட்டுத் தலங்கள் புனரமைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.