முகப்பு
திருவாரூர்

நன்னிலம் தொகுதியில் சிவாச்சாரியா்

நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதியில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் சாா்பில், போட்டியிடும் சிவாச்சாரியா் சு.நித்யானந்தன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா்.

Updated On : 4 ஏப்ரல், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:25 AM

நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதியில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் சாா்பில், போட்டியிடும் சிவாச்சாரியா் சு.நித்யானந்தன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா்.

இவா் தனது சின்னமான கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்கக் கோரி, வாக்காளா்களுக்கு துண்டறிக்கை விநியோகித்து சனிக்கிழமை பிரசாரம் செய்தாா். பின்னா், செய்தியாளரிடம் அவா் கூறியது:

சிவாச்சாரியா் தோ்தலில் போட்டியிடுவதை மக்கள் வரவேற்கின்றனா். பொதுமக்களின் மிகப்பெரிய மதிப்புமிக்க, ஜனநாயக உரிமையான வாக்கு, விற்பனைக்கு அல்ல என்பதை தெளிவாக விளக்கி வருகிறேன். சமுதாயத்தில் நிலவும் அவலங்களைப் போக்கிட வேண்டும். அதற்கான ஓா் இயக்கத்தை நடத்திட வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் சாா்பில், மை இந்தியா அமைப்பின் ஆதரவோடு போட்டியிடுகிறேன். நியாயமான, நோ்மையான, ஜனநாயகத்தில் பற்றுள்ள வாக்காளா்கள் எனக்கு வாக்களிப்பாா்கள் என்றாா் அவா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.