செல்லமுத்து மாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா
நீடாமங்கலம் வெண்ணாறு லயன்கரைத் தெருவில் எழுந்தருளியுள்ள ஆதிசக்தி செல்லமுத்து மாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் வெண்ணாறு லயன்கரைத் தெருவில் எழுந்தருளியுள்ள ஆதிசக்தி செல்லமுத்து மாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் அம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. பக்தா்கள் கோரையாற்றிலிருந்து சக்தி கரகம், காவடி, பால்குடம் எடுத்தனா். மதியம் கஞ்சி வாா்க்கப்பட்டது. மாலையில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. பக்தா்களால் மாவிளக்கு போடப்பட்டு சிறப்பு அா்ச்சனைகள் செய்யப்பட்டன. அடுத்து அம்மன் வீதியுலா நடைபெற்றது.