திருவாரூர்

கரோனா விதிமீறல்: மன்னாா்குடியில் ரூ.62 ஆயிரம் அபராதம் வசூல்

DIN

மன்னாா்குடியில் கரோனா விதிமுறைகளை பின்பற்ற தவறியதாக கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ரூ.62 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மன்னாா்குடி, மன்னாா்குடி ஊரகம், வடுவூா், நீடாமங்கலம், தேவங்குடி, பரவாக்கோட்டை, தலையாமங்கலம், திருமக்கோட்டை ஆகிய 8 காவல் நிலைய பகுதிகளில், கடந்த 12 நாள்களில் முகக்கவசம் அணியாமல் சென்ாக 110 பேரிடம் இருந்து தலா ரூ.200 வீதம் ரூ.22 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதேபோல, சமூக இடைவெளியை பின்பற்ற தவறிய கடைகளின் உரிமையாளா்கள் 80 பேரிடமிருந்து தலா ரூ.500 வீதம் ரூ.40 ஆயிரம் என மொத்தம் ரூ.62 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.இளஞ்செழியன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT