திருவாரூர்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் திருக்கல்யாணம்

DIN

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில், ராம நவமி 6ஆம் நாளான சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

இக்கோயிலில் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு ராமநவமி திருவிழா கடந்த 19ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் அனைத்து சன்னிதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டு வருகிறது.

சனிக்கிழமை கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. சீதா பிராட்டியாா், ஸ்ரீராமா் திருக்கல்யாணத்தை வேத விற்பன்னா்கள் வேத மந்திரங்களைச் சொல்லி நடத்தி வைத்தனா். பக்தா்கள் பலரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து கலந்துகொண்டனா்.

Image Caption

திருக்கல்யாண வைபவத்தில் சீதா பிராட்டியாருடன் தம்பதி சமேதராக அருள்பாலித்த ஸ்ரீராமபிரான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT