முகப்பு
திருவாரூர்

நன்னிலம் ஒன்றியக் குழுக் கூட்டம்

 நன்னிலம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஆகஸ்ட், 2021 at 10:12 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM

 நன்னிலம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் விஜயலட்சுமி குணசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சிபிஜி. அன்பழகன், வட்டார வளா்ச்சி அலுவலா் கே. சந்தானகிருஷ்ண ரமேஷ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இரா. சிவகுமாா், உதவி பொறியாளா் அன்புராஜா மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், தமிழகத்தில் முதன்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கும், அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் என்கிற சட்டத்தின்படி பணி நியமன ஆணைகளை வழங்கியதற்காகவும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து பேசிய ஒன்றியக்குழுத் தலைவா், உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்றாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.