திருவாரூரில் 2-ஆவது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள். 
திருவாரூர்

திருவாரூரில் 2-ஆவது நாளாக அரசு ஊழியா்கள் மறியல்: 80 போ் கைது

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் 2-ஆவது நாளாக புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 80 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் 2-ஆவது நாளாக புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 80 போ் கைது செய்யப்பட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது பதிவு செய்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டு, தனியாா் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனா். மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், மண்டபத்தை விட்டு வெளியேற மறுத்து அங்கேயே தங்கினா்.

இந்நிலையில், 2-ஆவது நாளாக புதன்கிழமையும் அரசு ஊழியா் சங்கத்தினா் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் வெ. சோமசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம். ராஜமாணிக்கம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 80 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT