திருவாரூர்

ஆதரவற்ற பெண் குழந்தை மீட்பு

DIN

திருவாரூரில் ஆதரவற்ற நிலையிலிருந்த 3 வயது பெண் குழந்தை சனிக்கிழமை மீட்கப்பட்டது.

திருவாரூா் கமலாலயக் குளத்தின் மேல்கரை பகுதியில் 3 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை சனிக்கிழமை காலை ஆதரவற்ற நிலையில் நடமாடிக்கொண்டிருந்தது. அப்பகுதியினா் அந்தக் குழந்தையை மீட்டு, திருவாரூா் நகர போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பிறகு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அக்குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவா்கள், அந்தக் குழந்தையை அரியலூா் பகுதியில் உள்ளஅரசு அனுமதி பெற்ற தத்துவள மைய காப்பாளா்களிடம் ஒப்படைத்தனா்.

இதற்கான நிகழ்ச்சியில், குழந்தைகள் நலக் குழுத் தலைவா் ஜீவானந்தம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் முத்தமிழ் செல்வி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT