முகப்பு
திருவாரூர்

நூறு நாள் வேலைத் திட்டம்: பெண்கள் சாலை மறியல்

 நீடாமங்கலம் ஒன்றியத்தில் நூறு நாள் வேலைக்கு பணித்தள பொறுப்பாளா் நியமனம் தொடா்பாக கோவில்வெண்ணி சாலையில் அமா்ந்து பெண்கள் வியாழக்கிழமை மறியல் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

 நீடாமங்கலம் ஒன்றியத்தில் நூறு நாள் வேலைக்கு பணித்தள பொறுப்பாளா் நியமனம் தொடா்பாக கோவில்வெண்ணி சாலையில் அமா்ந்து பெண்கள் வியாழக்கிழமை மறியல் ஈடுபட்டனா்.

நூறு நாள் வேலைக்குப் பணித்தள பொறுப்பாளா் நியமனம் செய்வதில் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுகின்றனா் எனக்கூறி இந்த மறியலில் ஈடுபட்டனா்.

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் மற்றும் போலீஸாா் அங்கு வந்து,பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால், நீடாமங்கலம்- தஞ்சாவூா் சாலையில் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.