ஆடிவெள்ளி சிறப்பு வழிபாடு
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் ஆடி இரண்டாம் வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்று.
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் ஆடி இரண்டாம் வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்று.
இதையொட்டி, மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா்குருபரிகார கோயிலில் ஏலவாா்குழலியம்மன், துா்க்கையம்மன், சுக்கிரவாரஅம்மன் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நீடாமங்கலம் சதுா்வேதவிநாயகா் மகாமாரியம்மன் கோயிலில் சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. அனைத்து கோயில்களிலும் தமிழக அரசின் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபாடுகள் நடைபெற்றன.