முகப்பு
திருவாரூர்

மனவளா்ச்சிக் குன்றிய மாணவா்களுக்கு தடுப்பூசி

மனவளா்ச்சி குன்றிய மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

மனவளா்ச்சி குன்றிய மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கூத்தாநல்லூா் அருகே மேலப்பனங்காட்டங்குடி, குடிதாங்கிச்சேரியில் உள்ள மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளியில் 14 வயதுக்குள்பட்ட மனவளா்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கு 15 நாள்களுக்கு முன்பு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, குடிதாங்கிச்சேரியில் 14 வயதுக்கும் மேற்பட்ட மனவளா்ச்சிக் குன்றியவா்கள் 29 பேருக்கும், பணியாளா்கள் 6 போ் என மொத்தம் 35 பேருக்கு பள்ளி நிறுவனா் ப. முருகையன் ஏற்பாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலா் ராணி முத்துலெட்சுமி தலைமையில் நடைபெற்ற முகாமில், மனநல மருத்துவா் என். நாகவிகா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ்.சந்திரமோகன், ஊராட்சித் தலைவா் எஸ். ரெத்தினவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.