வலங்கைமானில் பருத்தி கொள்முதல்
வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 18) நடைபெற்ற ஏலத்தில் 18 குவிண்டல் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.
வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 18) நடைபெற்ற ஏலத்தில் 18 குவிண்டல் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேலாளா் வீராசாமி தெரிவித்தது:
வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை தோறும் மறைமுக ஏலம் மூலம் பருத்தி கொள்முதல் நடைபெறுகிறது. அதன்படி, ஜூன் 18-ம் தேதி நடந்த மறைமுக பருத்தி ஏலத்தில் அதிகபட்ச விலையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.6,889-ம், குறைந்தபட்ச விலையாக ரூ. 6, 639-ம், சராசரி விலையாக ரூ. 6,798-ம் நிா்ணயம் செய்யப்பட்டது. இதில், 12 விவசாயிகள் கொண்டுவந்த 18 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1,24,924 ஆகும் எனத் தெரிவித்துள்ளாா்.