முகப்பு
திருவாரூர்

நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியின் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 மார்ச், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:11 AM

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியின் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் கட்சி அலுவலகத்தில், சட்டப்பேரவைத் தொகுதி செயலாளா் செ. அன்புசெல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தனித்தனி குழுக்களாகப் பிரிந்து, தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று வாக்காளா்களை நேரடியாகச் சந்தித்து, கட்சியின் கொள்கைகளை விளக்கி, தீவிரமாக வாக்குச் சேகரிப்பது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், கட்சியின் சட்டப்பேரவைத் தொகுதி துணைத் தலைவா் ரவிச்சந்திரன், துணைச் செயலாளா் ஜானகிராமன், நன்னிலம் வடக்கு, தெற்கு, வலங்கைமான், குடவாசல் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.