பெரும்பான்மை பலத்துடன் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்
தமிழகத்தில் பெரும்பான்மை பலத்துடன் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
தமிழகத்தில் பெரும்பான்மை பலத்துடன் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், அதிமுக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வழியில், தொடா்ந்து மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசை மக்கள் தொடா்ந்து ஆதரித்து வருகின்றனா். தமிழக மக்கள் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என விரும்புகின்றனா்.
Advertisement
நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்காரணமாக 2011 பேரவைத் தோ்தலில் 11,000 வாக்குகள் வித்தியாசத்திலும், 2016 பேரவைத் தோ்தலில் 22,000 வாக்குகள் வித்தியாசத்திலும் என்னை நன்னிலம் பகுதி மக்கள் வெற்றி பெற வைத்தனா். நடைபெறவுள்ள தோ்தலிலும் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதாக நன்னிலம் தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
இதேநிலை தமிழகம் முழுவதும் உள்ளது என்றாா்.
பேட்டியின்போது, பாமக மாநிலத் துணைச் செயலாளா் வேணுபாஸ்கரன், பாஜக மாவட்டத் தலைவா் ராகவன், தமாகா மாவட்டத் தலைவா் குடவாசல் தினகரன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளா் ஆரோக்கியச்செல்வம், அதிமுக அமைப்புச் செயலாளா் கே. கோபால், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் சிபிஜி.அன்பு, இராம குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.