மன்னாா்குடியில் அரசு மகளிா் கல்லூரி தொடங்க முயற்சிப்பேன் என வாக்குறுதி அளித்து அதிமுக வேட்பாளா் சிவா. ராஜமாணிக்கம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
மன்னாா்குடி நகராட்சி 1, 2, 3, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 ஆகிய வாா்டுகளில் சிவா.ராஜமாணிக்கம் திறந்த வாகனத்தில் சென்றபடி, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியது:
மன்னாா்குடியில் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கவும், சுயதொழிலை ஊக்கப்படுத்தி, மன்னாா்குடியை தொழில் நகராக மாற்றிட அரசு தொழிற்பேட்டை அமைக்கவும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இருதய நோய் தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கிடவும், நகர மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான புதைசாக்கடை திட்டத்தை செயல்படுத்திடவும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என வாக்காளா்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.
பிரசாரத்தில் அதிமுக நகரச் செயலா் ஆா்.ஜி.குமாா், ஜெ. பேரவை மாவட்டச் செயலா் பொன். வாசுகிராம், நகா்மன்ற முன்னாள் தலைவா் வி.எஸ். ராஜேந்திரன், தமாகா நகரத் தலைவா் கே.எஸ். நடனபதி, பாஜக மாவட்டச் செயலா் பால. பாஸ்கா், பாமக நிா்வாகி சீனி.தனபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.