மினிலாரி மோதி பெண் தபால் ஊழியா் உயிரிழப்பு
திருவாரூா் அருகே மினிலாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் (தற்காலிக தபால் ஊழியா்) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் அருகே மினிலாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் (தற்காலிக தபால் ஊழியா்) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் அருகே கிடாரங்கொண்டான் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் விஷ்ணுபிரகாஷ் மனைவி ஜெயபாரதி (26). இவா்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. விஷ்ணுபிரகாஷ் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறாா். ஜெயபாரதி, ஆந்தக்குடியில் உள்ள தபால் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், ஜெயபாரதி தப்ளாம்புலியூா் சாலை வழியாக தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தாா். அப்போது, எதிரில் வந்த மினிலாரி ஜெயபாரதி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி, பின்னா் அங்கிருந்த மரத்தின்மீது மோதி நின்றது.
விபத்தில், காயமடைந்த ஜெயபாரதியை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கிருந்து பரிந்துரையின்பேரில் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். எனினும், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, திருவாரூா் தாலுக்கா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.