முகப்பு
தமிழ்நாடு

புதுக்கோட்டை: மகனுடன் நிலத் தகராறு.. பெற்றோர் தூக்கிட்டுத் தற்கொலை!

புதுக்கோட்டையில் நிலத்தை விற்பனை செய்தது தொடர்பான தகராறில், பெற்றோர் தூக்கிட்டுத் தற்கொலை செய்ததைப் பற்றி...

Updated On : 24 மார்ச், 2026 at 4:21 AM
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

புதுக்கோட்டையில் நிலத்தை விற்பனை செய்தது தொடர்பான தகராறில், பெற்றோர் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் பூவரசக்குடி அருகேயுள்ள திருவுடையார்பட்டியைச் சேர்ந்த தம்பதி கருப்பையா (70), லட்சுமி (65). இவர்களுக்கு இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர்.

இரு மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மூத்த மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் முருகேசன் உள்ளூர் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இளைய மகனான முருகேசன், 7 சென்ட் நிலத்தை விற்பனை செய்துள்ளார். இதுதொடர்பாக பெற்றோருக்கும் முருகேசனும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்கிடையேயான மோதல் முற்றிய நிலையில், சோகத்தில் இருந்த கருப்பையாவும் லட்சுமியும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) காலை 6.30 மணியளவில், வீட்டின் அருகேயுள்ள மாமரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

முதிய தம்பதிகள் இருவர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வல்லத்திராக்கோட்டை காவல் துறையினர், இவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

நிலத்தை விற்றது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அவரது பெற்றோர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

An incident in Pudukkottai, in which parents committed suicide by hanging themselves following a dispute over the sale of land, has caused a sensation in the region.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.