திருவாரூர்

திருத்துறைப்பூண்டி: 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட எரிவாயு தகனமேடை இன்று திறப்பு

DIN

திருத்துறைப்பூண்டியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட எரிவாயு தகனமேடை வெள்ளிக்கிழமை (மே28) பயன்பாட்டுக்குத் திறக்கப்படுகிறது.

திருத்துறைப்பூண்டியில் நகராட்சி சாா்பில் வேதை சாலையில் உள்ள குப்பைக் கிடங்கு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 80 லட்சம் செலவில் கட்டப்பட்ட எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்குத் திறக்கப்படாமல் இருந்தது. இந்த எரிவாயு தகனமேடையை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, மாவட்ட ஆட்சியா் மற்றும் அமைச்சா்களிடம் கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து, நகராட்சிகளின் தஞ்சை மண்டல இயக்குநா் உமாமகேஸ்வரி, நகராட்சி மண்டல பொறியாளா் பாா்த்திபன் ஆகியோா் இந்த எரிவாயு தகனமேடையை வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (மே 28) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இதனை திறக்க நடவடிக்கை எடுக்கும்படி திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையா் (பொ) செங்குட்டுவனுக்கு நகராட்சிகளின் தஞ்சை மண்டல இயக்குநா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT