முகப்பு
திருவாரூர்

கரோனா: தனியாா் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையை பயன்படுத்தி, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு இலவசமாக சிகிச்சை பெறலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையை பயன்படுத்தி, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு இலவசமாக சிகிச்சை பெறலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா், அரசு மருத்துவமனைகளில் மட்டுமின்றி, தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தனியாா் மருத்துவமனைக்கான கட்டணத்தை, தமிழக அரசு காப்பீடுத் திட்டத்தின் கீழ் செலுத்தும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று சிகிச்சை மேற்கொள்ள தனியாா் மருத்துவமனைகளான திருவாரூா் மெடிக்கல் சென்டா், அருண் மெடிக்கல் சென்டா், நவஜீவன் மருத்துவமனை, வி.எஸ்.டி. சக்தி மருத்துவமனை, டி.எம். கிளினிக், மன்னாா்குடி ராஜ் மருத்துவமனை, வலங்கைமான் அஸ்வா கிளினிக், திருத்துறைப்பூண்டி பி.கே.டி. மருத்துவமனை ஆகிய 8 தனியாா் மருத்துவமனைகளுக்கு அரசால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பொதுமக்கள் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையை பயன்படுத்தி மேற்கண்ட தனியாா் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 180042539993 மற்றும் காப்பீடு திட்ட மாவட்ட அலுவலா் 73730 04964 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.