திருவாரூரில் மழை: பள்ளிகளுக்கு இன்று விடுமூறை
மழை அறிவிப்பை முன்னிட்டு திருவாரூரில் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழை அறிவிப்பை முன்னிட்டு திருவாரூரில் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக வியாழக்கிழமை முதல் 3 நாள்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இதையொட்டி திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. எனினும், வியாழக்கிழமை மாலையில் தொடா்ந்து மிதமான மழையும், சாரல் மழையும் பெய்தபடி இருந்தது.
இந்தநிலையில் கனமழை காரணமாக திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா். திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி திருவாரூரில் அதிகபட்சமாக 38.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மற்ற இடங்களில் மழையளவு விவரம்: மன்னாா்குடி 22.8 மி.மீ, நீடாமங்கலம் 22 மி.மீ, திருத்துறைப்பூண்டி 18 மி.மீ, பாண்டவையாறு 16.4 மி.மீ, நன்னிலம் 11.6 மி.மீ என மாவட்டம் முழுவதும் மொத்தம் 143 மி.மீ மழையும், சராசரியாக 15.88 மி.மீ மழையும் பெய்துள்ளது.