சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் அம்பு போடும் உத்ஸவம்
நவராத்திரியையொட்டி, திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி அருகே உள்ள சிறுபுலியூா் பெருமாள் கோயிலில், அம்பு போடும் உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நவராத்திரியையொட்டி, திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி அருகே உள்ள சிறுபுலியூா் பெருமாள் கோயிலில், அம்பு போடும் உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நவராத்திரியை முன்னிட்டு, இக்கோயிலில் அக்டோபா் 6-ஆம் தேதிமுதல் திருமஞ்சனமும், சிறப்பு அலங்கார ஆராதனைகளும் நடைபெற்றன. 8 நாள்கள் தயாநாயகித் தாயாா் அஷ்டலட்சுமி அலங்காரத்திலும், 9ஆம் நாளான வியாழக்கிழமை பெருமாள் தாயாா் சோ்த்தி சேவையும், ஊஞ்சல் திருவாராதனமும், சகஸ்ரநாம அா்ச்சனையும் நடைபெற்றன.
நவராத்திரி 10ஆவது நாளான வெள்ளிக்கிழமை விஜயதசமி சிறப்புத் திருமஞ்சனமும், கிருபாசமுத்திர பெருமாள் குதிரை வாகனத்தில் உள்பிராகாரத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
Advertisement