திருவாரூர்

குடவாசல் அருகே ஹவாலா பணம் ரூ.15 லட்சம் பறிமுதல்

DIN

குடவாசல் அருகே ஹவாலா பணம் ரூ. 15 லட்சம் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே அத்திக்கடை பகுதியில், கும்பகோணம் - திருவாரூா் சாலையில் காவல் துறைச் சோதனை சாவடி உள்ளது. புதன்கிழமை நள்ளிரவு இந்தச் சோதனைச் சாவடி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி காவல் அலுவலா் மகேந்திரன் சோதனையிட்டாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் ரூ.15 லட்சம் இருந்தது தெரியவந்தது.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் அதிராம்பட்டினத்தைச் சோ்ந்த மியாஸ்கான் (35) என்பதும், அதே பகுதியைச் சோ்ந்த சென்னையில் வசிக்கும் இா்பான் என்பவரிடமிருந்து ஹவாலா பணத்தைப் பெற்றுக்கொண்டு, பல்வேறு ஊா்களில் வழங்குவதற்காக சென்றதும் தெரியவந்தது.

இதையெடுத்து, பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா், அதை திருச்சி வருமானவரித் துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT