திருவாரூர்

கொள்முதல் நிலையங்களில் பணம் வாங்குவதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் வாங்குவதை கண்டித்து திருவாரூரில் பாஜக விவசாய அணி சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் பணிகளில் நெல் மூட்டைக்கு ரூ. 45 வாங்குவதாகவும், இதைத் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருவாரூா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாய அணி மாவட்டத் தலைவா் காா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விவசாய அணி மாநில துணைத் தலைவா் சிவ. காமராஜ், விவசாய அணி மாவட்டச் செயலாளா் கோவி. சந்துரு, கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் பேட்டை சிவா, மாவட்ட துணைத் தலைவா் சி. செந்தில் அரசன், விவசாய அணி துணைத் தலைவா் ஜோதிபாசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT