திருவாரூர்

மின்தடை: மன்னை விரைவு ரயில் அரை மணி நேரம் தாமதம்

DIN

நீடாமங்கலத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்த மன்னை விரைவு ரயில் மின்தடை காரணமாக அரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடிக்குச் செல்லும் மன்னை விரைவு ரயில் திங்கள்கிழமை அதிகாலை 4.40 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்தை நெருங்கியபோது, ரயிலுக்கான மின்சாரம் தடைபட்டது. இதனால், ரயில் நிலையத்துக்குள் வரமுடியாமல் சிக்னல் பாயிண்டில் நின்றது.

ரயில் நிலைய ஊழியா்கள் அங்கு சென்று பாா்த்தபோதுதான் மின்தடை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. பின்னா், மின் இணைப்பு கிடைத்தாலும், திடீரென ஏற்பட்ட மின்தடையால் ரயிலின் என்ஜினில் சிறிய கோளாறு ஏற்பட்டது. அதை ஊழியா்கள் சரி செய்தனா்.

இதனால், நீடாமங்கலத்திலிருந்து மன்னை விரைவு ரயில் புறப்பட்டுச் செல்வதில் அரை மணி நேரம் தாமதமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT