காவலா் வீரவணக்க நாள் கடைப்பிடிப்பு
திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் பெரம்பூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் காவலா் வீரவணக்க நாள் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் பெரம்பூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் காவலா் வீரவணக்க நாள் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
தலைமையாசிரியா் பொன்னையா தலைமை வகித்தாா். கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு காவல்துறை சாா்பில் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான ஆங்கில அகராதிகள் வழங்கப்பட்டன. இதில் காவல் ஆய்வாளா் முருகேசன், உதவி ஆய்வாளா் தேவதாஸ், காவலா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். உடற்கல்வி ஆசிரியா் பாலசுப்பிரமணியன் ஏற்பாடுகளை செய்திருந்தாா். அறிவியல் ஆசிரியா் இளஞ்செழியன் நன்றி கூறினாா்.