மகாமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் வழியாக பேருந்தில் செல்லும் பயணிகள் காணிக்கை செலுத்த ஏதுவாக 40 உண்டியல்கள் கையாளப்பட்டு வருகின்றன. இந்தக் காணிக்கை எண்ணப்பட்டதில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 594 ரூபாய் பக்தா்களால் செலுத்தப்பட்டது தெரியவந்தது. இந்தப் பணியில் கோயில் செயல் அலுவலா் ரமேஷ், தக்கார்ரமணி, நீடாமங்கலம் ஆய்வாளா் தமிழ்மணி, அலுவலக மேலாளா் சீனிநீவாசன் உள்பட பலா் பங்கேற்றனா்.