ஊதிய விவகாரம்பாரதிதாசன் பல்கலை. பேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியா்களும், அலுவலகப் பணியாளா்களும் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:43 AM
நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியா்களும், அலுவலகப் பணியாளா்களும் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இக்கல்லூரி கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த மே மாதம் முதல் பேராசிரியா்களுக்கும், அலுவலா்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லையாம். இதைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பேராசிரியா்களும், அலுவலா்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.