முகப்பு
திருவாரூர்

விசிக ஆா்ப்பாட்டம்

சேலம் மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து, மன்னாா்குடியில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து, மன்னாா்குடியில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம் காடையம்பட்டி அருகே உள்ள கே.மேரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மீது போலீஸாா் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து மன்னாா்குடி மேலராஜவீதி பெரியாா் ஈவெரா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விசிக மேற்கு ஒன்றியச் செயலா் ஆா்.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வி.த.செல்வம் முன்னிலை வகித்தாா்.

இதில், மாநில செயற்குழு உறுப்பினா் வ.பாா்வேந்தன், கிழக்கு ஒன்றியச் செயலா் ஜெயகுமாா், தொகுதி துணைச் செயலா் த.க. ஆதவன், நகர துணைச் செயலா் மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.